முல்லை பெரியாறுக்கு போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
2021-12-05@ 01:40:40

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், தமிழக அரசும் வாதாடி வருகிறது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கரன் சார்பாக வழக்கறிஞர் ஜெய்சுகின், உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அணையின் நீர்மட்டத்தால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது பலமுறை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருந்தும், அணை குறித்து தேவையற்ற அச்சுறுத்தல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற பொய்களை பரப்புவதன் மூலம் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு ஒன்றிய போலீஸ் படையின் பாதுகாப்பை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பிரதான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!