தடுப்பூசி போடாவிட்டால் ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் லீவு எடுக்கலாம்; கேரள கல்வி அமைச்சர் அதிரடி.!
2021-12-04@ 19:17:50

திருவனந்தபுரம்: கேரளாவில் 1707 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை. ஊசி போடாதவர்கள் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சமீபத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் அமைச்சர் சிவன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தனர். இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போடும் ஆசிரியர்கள் எண்ணிக்ைக தற்போது அதிகரித்துள்ளது. நேற்று வரை உள்ள கணக்கின்படி 1707 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போடவில்ைல. இதில் 1066 பேர் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆவர். மலப்புரம் மாவட்டத்தில் தான் 201 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லை என்று அறிந்த பெற்ேறார் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே குழந்தைகள் நலனுக்காக ஆசிரியர்கள் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது. எனவே உடல் பிரச்னை உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை ஆஜர்படுத்த வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால் வாரம் தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்து கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா.. 33 பேர் பலி.... 2,158 பேர் குணமடைந்தனர்!!
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!