வான்கடேவில் சதம் அடித்தது அற்புதமான உணர்வு; மயங்க் அகர்வால் நெகிழ்ச்சி
2021-12-04@ 15:09:10

மும்பை: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 2வது டெஸ்ட் மும்பையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 221 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆட்டம் இழக்காமல் 120 ரன் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு 4வது சதமாகும். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அவர் கூறியதாவது: இந்த டெஸ்ட்டில்எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தபோது ராகுல் டிராவிட் என்னிடம் வந்து உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்.
அதைத்தான் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். களத்தில் செட் ஆனதும் அதை பெரிய ஸ்கோர் ஆக்குங்கள் என்றார். அதன்படி நான் சதம் விளாசியதால் மகிழ்ச்சியடைகிறேன். அஜாஸ் பட்டேல் சிறப்பாக பந்துவீசினார். அவர் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் நான் அவரின் பந்துவீச்சை அடித்து ஆடும் திட்டத்தில் செயல்பட்டேன். வான்கடே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது ஒரு அற்புதமான உணர்வு, என்றார்.
மேலும் செய்திகள்
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் புது சாம்பியன் கிடைக்கலாம்...: சோம்தேவ் கணிப்பு
இங்கிலாந்து அணியில் மீண்டும் பிராடு, ஆண்டர்சன்
20 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் லக்னோ அணி 210 ரன்கள் குவிப்பு: டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தல்
ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி
19வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்துவீச்சு திருப்பு முனையாக அமைந்தது : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி
பிளே ஆஃப் சுற்றுக்கு மல்லுக்கட்டு கொல்கத்தா-லக்னோ அணிகள் இன்று மோதல்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!