'கட்டுனா உன்ன தான் கட்டுவன்': மைசூரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த காதலன்..!!
2021-12-04@ 14:38:49

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் ஒருவர் காதலியை கரம் பிடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிக்கண்ணா என்ற முதியவரும், ஜெயம்மா என்பவரும் இளம் வயதில் காதலித்துள்ளார்கள். ஆனால் ஜெயம்மாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜெயம்மாவை அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 4 ஆண்டுகளில் ஜெயம்மா கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார்.
அதே சமயம் சிக்கண்ணா திருமணமே செய்து கொள்ளாமல் காதலியின் நினைவிலேயே காலத்தை நகர்த்தியுள்ளார். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் தங்கள் அன்பை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்கள். இதனை தொடர்ந்து மேல்கோட்டை என்ற இடத்தில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இளம் வயதில் தவறவிட்ட காதலை முதுமையில் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருவரும் தங்களது இல்லற வாழ்வை தொடங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!