மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி
2021-12-04@ 02:44:18

திருவள்ளூர்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முகமையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி முகாம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஜீவராணி கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, `தரமான விதையின் முக்கியத் துவத்தைப்பற்றியும் விதைப்பண்ணைகளில் பிற ரக கலவன்கள் நீக்கப்பட்டு இனத்தூய்மை பராமரிக்கப்பட வேண்டும்.
நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை விதையாக உற்பத்தி செய்வதால் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் கிடைக்கும்’ என்றார். மேலும் மாவட்ட விதைச்சான்று அலுவலர் அபிலாஷா ேபசுகையில், `விதைப்பண்ணை அமைத்து பதிவு செய்வது, விதைப்பண்ணைகள் பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்படும் வயலானது விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய தகுந்த இடமாக இருக்க வேண்டும், என்றார். இப்பயிற்சி முகாமில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி
சொல்லிட்டாங்க...
மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்