ரொனால்டோ 800
2021-12-04@ 01:06:15

முதல் தர கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற பெருமை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (36 வயது) கிடைத்துள்ளது. தற்போது மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஆர்செனல் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 2 கோல் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டட் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த 2 கோல் சேர்த்து அவரது மொத்த கோல் எண்ணிக்கை 801 ஆக உள்ளது.
மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக 130 கோல், ரியல் மாட்ரிட் அணிக்காக 450, ஜுவென்டஸ் அணிக்காக 101, ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 மற்றும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக 115 கோல் அடித்துள்ளார். பீலே (769), ரொமாரியோ, பெரன்க் புஸ்காஸ் (தலா 761), லியோனல் மெஸ்ஸி (756) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். புதிய சாதனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ள ரொனால்டோவுக்கு கால்பந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்... அகர்வால் நம்பிக்கை!
சில்லி பாய்ன்ட்...
டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அபாரமான வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் மும்பையை வீழ்த்தி ஐதராபாத் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முனைப்பு
பஞ்சாபை வீழ்த்தி டெல்லி அபாரம் அணியின் வெற்றிக்கு உதவியதில் மிகுந்த மகிழ்ச்சி: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் நெகிழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!