போலி பத்திரம் தயாரித்து மூதாட்டியின் வீட்டு மனையை அபகரிக்க முயன்றவர் கைது
2021-12-04@ 00:02:57

சென்னை: சூளைமேடு பகுதியை சேர்ந்த ராஜம் (60), தனக்கு சொந்தமான வீட்டு மனையை விற்பனை செய்யும்படி கடந்த ஆண்டு முகப்பேரை சேர்ந்த தென்றல் ராஜாவிடம் (54) கூறியுள்ளார். அப்போது, அந்த நிலத்தின் ஆவண நகலை பெற்ற தென்றல் ராஜா, தனது கூட்டாளியான ஆவடியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து, ராஜம் பெயரில் போலி பத்திரம் தயாரித்து, அந்த இடத்தை ராஜேஸ்வரி என்பவரிடம் விற்று, முதல் தவணையாக ₹15 லட்சத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானார்.
இதனையடுத்து, அந்த இடத்தை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், தனது பெயரில் பதிவு செய்ய ராஜேஸ்வரி சென்றபோது, அது போலி பத்திரம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து, நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு தென்றல் ராஜாவை கைது செய்தனர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஒரே நேரத்தில் 3 பைக் திருட்டு
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
கத்தியை காட்டி வழிப்பறி: வாலிபர் கைது
திருப்பூர் அருகே பயங்கரம் தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா? கள்ளக்காதலனா?
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை