மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்: ஆந்திரா, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்..!!
2021-12-03@ 17:12:10

மும்பை: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பகல் 11:30 மணியளவில் புயலாக உருமாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ஜாவத் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாவத் புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே நாளை மறுநாள் மாலையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் புயல் பாதிப்பு பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
மேலும் உணவு, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் முடிக்கிவிட்டுள்ளன. இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா வழியாக செல்லும் 95 விரைவு ரயில்கள் இன்று முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்