குடந்தை புதிய பேருந்து நிலையம் அருகே பிடாரி குளம் சுற்று சுவர் இடிந்து விழும் அபாயம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2021-12-03@ 14:33:08

கும்பகோணம் : கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே பராமரிப்பின்றி உள்ள பிடாரி குளத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிடாரி குளம் மிகவும் தொன்மை வாய்ந்த குளமாக விளங்குகிறது. இக்குளத்தை சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான பழம் மற்றும் காய்கறி கடைகள் உள்ளது. இருப்பினும் அப்பகுதியை சுற்றி குடியிருப்பவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி அசுத்தமாக காணப்படுகிறது.
மேலும் மதுப்பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து எறிந்து செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சரியான பராமரிப்பின்றி தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 20 நாட்களாக கும்பகோணத்தில் பெய்த கனமழையால் குளத்தின் நீர் கொள்ளளவு முழுவதுமாக அதிகரித்து சுற்றுச்சுவர் வலுவிழந்து உடையும் நிலை காணப்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!