கள்ளக்குறிச்சி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க புதிய இயந்திரம்-கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
2021-12-03@ 14:26:48

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்கட்ட கேசவேலு நகர் பகுதியில் உயர்மட்ட குடிநீர் தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள பழைய குப்பைகளை தரம் பிரிப்பதற்கு இயந்திரம் அமைக்கும் பணியை கலெக்டர் தர் ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைகிடங்கில் நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்ட 26,621 க.மீ குப்பை கிடங்கினை உயிரியல் செயலாக்கம் முறையில் தரம் பிரித்து மட்கும் குப்பையை விவசாய பயன்பாட்டிற்கு வழங்கவும் மட்காத குப்பையை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கவும் ஏதுவாக புதிய இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணியினை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்றார்.
அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர், பணி மேற்பார்வையாளர் முகமதுசுபேர், நகர கட்டமைப்பு ஆய்வாளர் தாமரைசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!