ஒட்டன்சத்திரத்தில் மழைநீர் குளமானது ரயில்வே சப்வே-பொதுமக்கள் அவதி
2021-12-03@ 14:09:05

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட அருணா தியேட்டர் எதிரே ரயில்வே சப்வே உள்ளது. இதன் வழியாக காந்தி நகர், விஸ்வநாதன் நகர், திடீர் நகர் பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த கனமழையால் சப்வேயில் மழைநீர் தேங்கி சுமார் 20 அடிக்கு மேல் குளம் போல் காட்சியாளிக்கின்றது. மழைகாலங்களில் இங்கு தண்ணீர் தேங்குவதால் சுமார் ஒரு கிமீ சுற்றி மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் பல நாட்களாக குளம்போல் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் இடமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் அவ்வப்போது தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி வந்தனர். ஆனால் தற்போது மழைநீர் நீச்சல் குளம்போல் தேங்கியுள்ளதால் அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும்அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரயில்வே சப்வேயில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன், இங்கு மழைநீர் மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!