சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவிக்கு கீதா கோபிநாத் நியமனம்: இந்தியர்கள் பெருமிதம்
2021-12-03@ 12:40:59

நியூயார்க்: சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்படவுள்ளார். தற்போதைய துணை நிர்வாக இயக்குனரான ஜெப்ரி, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். இதை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், அவருடைய பதவிக்கு வரவுள்ளார். 49 வயதாகும் கீதா கோபிநாத்தின் பூர்வீகம் கேரளாவாகும். டெல்லி பல்கலைக்கழகத்திலும், வாஷிங்டன் பல்கலைக் கழகத்திலும் பட்டப்படிப்பை பயின்றவர்.
கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டிருந்த அவர், நிதியத்தின் நிர்வாக பொறுப்புக்கு தேர்வாகி இருப்பது இந்தியர்களை பெருமைப்பட செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரியான கிறிஸ்டலினா ஜார்ஜீவா-வுக்கு அடுத்தபடியாகவும், இவருக்குக் கீழ் இருக்கும் முதல் அதிகாரியாகவும் கீதா கோபிநாத் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும். வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சரிவில் இருக்கும் நிதியுதவி செய்யும் மிக முக்கியமான அமைப்பாக இருக்கும் காரணத்தால், இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அறிவிப்புகளும், முடிவுகளும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானதாக உள்ளது.
மேலும் செய்திகள்
ஆபத்தான விளையாட்டு வேண்டாம்!: சீனாவுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 4 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு; சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்குவோம்; ஜப்பானில் பிரதமர் மோடி வலியுறுத்தல்; சீனா மீது குற்றச்சாட்டு
ரஷ்யாவின் போர் குறியீடாக இருக்கும் ‘இசட், வி’ எழுத்துகளை பயன்படுத்த தடை; உக்ரைன் நாடாளுமன்றத்தில் புது சட்டம்
இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள்!: இந்திய வளர்ச்சியில் ஜப்பானின் பங்கு முக்கியமானது.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்: பெல்ஜியம் அரசு உத்தரவு
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பதவியேற்றதும் டோக்கியோ பறந்த ஆஸி. பிரதமர்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை