ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!
2021-12-03@ 10:17:32

கொனார்க்: ஒடிசா மாநிலத்தில் தொடங்கியுள்ள சர்வேதேச மணற்சிற்ப திருவிழாவில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள சிற்பங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. புரி மாவட்டத்தில் உள்ள சரித்திர புகழ் பெற்ற கொனார்க் கடற்கரையில் கடந்த 1ம் தேதி சர்வேதேச மணற்சிற்ப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள 5 நாட்கள் மணற்சிற்ப திருவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்கின்றனர். ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மணலை மலைக்க வைக்கும் சிற்பங்களாக உருவாக்கி காண்போரை பிரமிக்க வைத்துள்ளனர்.
மணற்சிற்ப திருவிழாவில் தினமும் வெவ்வேறு தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிற்பங்களை கண்டு ரசிக்க நாடு முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் கொனார்க் கடற்கரையில் குவிந்திருக்கின்றனர். கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்படும் ஒடிசா சர்வேதேச மணற்சிற்ப திருவிழா, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இங்கு நடக்கும் அனைத்து காட்கிகள் மற்றும் மணல் சிற்பக்கலைகளை மக்கள் புகைப்படம் எடுத்து சென்றனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்