எஸ்.சி, எஸ்.டி. நல ஆணையத்திற்கு அலுவலகத்தை ஒதுக்க வேண்டும்: முதல்வருக்கு பணியாளர் சங்கம் கோரிக்கை
2021-12-03@ 00:08:33

சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் சங்க மாநில தலைவர் டி.மணிமொழி, பொது செயலாளர் மகிமை தாஸ் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் சட்டமியற்ற அதற்கான சட்ட முன்வடிவு வரைவை தாக்கல் செய்து, அந்த ஆணையத்திற்கு தலைவர், துணை தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களை நியமித்து ஆணை வெளியிட்டிருந்தார். பன்னெடுங்காலமாக தமிழகத்தில் மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் இல்லாதிருந்த நிலையில் ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து கொடுத்தார். அந்த ஆணையத்துக்கு அலுவலகத்தை ஒதுக்கி தந்து ஆணையம் விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து போலீசார் அபராதம் வசூல்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை,
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!