குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
2021-12-03@ 00:04:46

திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்குள் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழையால் காக்களூர் ஏரி நிரம்பி மழைநீர் செல்ல வழியின்றி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் செய்தனர். அதன் பேரில் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
காக்களூர் ஊராட்சி ஏரி நிரம்பி கலங்கல் மடை வழியாக உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் வரைபட உதவியுடன் ஆய்வு செய்ததில் காக்களூர் ஏரிக்கரை சாலையோரம் தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. தற்போது, இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிந்தது. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கு்ப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த்துறை, பொதுப்பணித்தறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
Tags:
Residential area water lake canal occupations removal authorities குடியிருப்பு பகுதி தண்ணீர் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள்மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை