கொடி நாள் நிதிக்கு அதிக நன்கொடை சன் டி.வி.க்கு பாராட்டு
2021-12-03@ 00:04:16

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதிக நிதி கொடுத்த சன் டி.வி. கவுரவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய சைனிக் போர்டு மூலம், முன்னாள் படை வீரர்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இதற்கான நிதி திரட்டும் வகையில், டிசம்பர் 7ம் தேதி கொடி நாளாக அறிவிக்கப்பட்டு, கொடி நாள் நிதி திரட்டப்படுகிறது. பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடைகளை அளிக்குமாறு கேந்திரிய சைனிக் போர்டு கேட்டுக்கொண்டது.
இதையேற்று, கொடி நாள் நிதியாக சன் டி.வி. கடந்த ஆண்டில் 5 கோடி ரூபாயும், இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாயும் நிதி அளித்தது. அதிக அளவில் கொடி நாள் நிதி அளித்த நிறுவனங்களை கவுரவப்படுத்துவதற்கான நிகழ்ச்சி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள விமானப்படை அரங்கில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சன் டி.வி. செயல் இயக்குநர் காவேரி கலாநிதி மாறனுக்கு கேடயம் அளித்து கவுரவித்தார். கொடி நாள் நிதிக்கு அதிக நன்கொடை அளித்த ஸ்டேட் வங்கி, ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, எல்.ஜி., கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டன. முன்னாள் படைவீரர்களுக்காக கொடி நாள் நிதி வழங்கிய சன் டி.வி., புயல், கொரோனா பரவல், பூகம்பம் போன்ற பேரிடர் நிகழ்வுகளின்போதும் பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது. அத்துடன், ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்காகவும் சன் டி.வி. பல ஆண்டுகளாக தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:
Flag Day Fund High Donation Sun TV Appreciation கொடி நாள் நிதி அதிக நன்கொடை சன் டி.வி. பாராட்டுமேலும் செய்திகள்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்