'நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது': திருச்சி சிவா குற்றச்சாட்டு
2021-12-01@ 14:45:49

டெல்லி: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முடித்து வைக்கப்பட்ட கடந்த கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுகளுக்கு இப்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். மாநிலங்களவையில் பிரதான எதிர்க்கட்சியின் தலைவருக்கு கூட பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எதை ஒளிபரப்புவது என்பதை இவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்? என்றும் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இதனால் எதிர்க்கட்சிகளின் நியாயமான குரல் கூட மக்களை சென்றடையவிடாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். பெகாஸஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என எந்த முக்கிய பிரச்சனைகளையும் விவாதிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் திருச்சி சிவா புகார் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்