கொடைக்கானல் கீழ்மலையில் விளைநிலங்களை சேதமாக்கிய ஒற்றை யானை விரட்டியடிப்பு
2021-12-01@ 14:29:44

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலையில் விளைநிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள தாண்டிக்குடி, கன்னிவாடி வனச்சரக பகுதிகளுக்குள் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை அப்பகுதி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்லவே அச்சப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஒற்றை யானை, பள்ளத்து கால்வாய் என்ற பகுதியில் சோலார் மின்வேலிகளை உடைத்து விளைநிலங்களுக்குள் புகுந்தது.
தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையிலான 26 பேர் கொண்ட வனத்துறை குழுவினர், யானையை வெடி வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். வனத்துறையினரின் நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த ஒற்றை யானை நேற்று ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் அந்த யானை விளைநிலப்பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!