அந்தியூர் அருகே உடல்நலம் குன்றிய ஆசிரியரை தொட்டில் கட்டி7 கி.மீ. தூக்கி சென்ற கிராம மக்கள்
2021-11-30@ 00:09:40

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்டது கத்திரிமலை. 7 கி.மீ. சாலை வசதியின்றி உள்ள இந்த மலை கிராமத்திற்கு நடைபாதை மட்டுமே வழி. இங்கு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் குணசேகரன். இவர், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் அங்கேயே மனைவியுடன் தங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.
விடுமுறை தினமான நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிராம மக்கள், உடனடியாக அவரை தொட்டில் கட்டி மலைப்பாதை வழியாக சுமார் 7 கி.மீ. தூரம் தூக்கி வந்தனர். அதன்பின், வாகனம் மூலம் அழைத்துச் சென்று கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மேட்டூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த பின் நேற்று முன்தினம் இரவே வீடு திரும்பினார். கிராம மக்களின் அன்பால் ஆசிரியர் நெகிழ்ந்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகள்
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!