ஒமிக்ரான் உருமாற்றம் கண்டறியும் ஆய்வு 12 ஆய்வகங்களுக்கு அனுமதி
2021-11-30@ 00:02:06

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸின் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறிய சிறப்பு ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வுகளை மேற்கொள்ள 12 ஆய்கவங்களுக்கு பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 12 ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெர்மோ டெக்பாத் நவீன கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும். கொரோனா வைரஸில் உருமாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால், அவற்றை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு 7 நாட்களில் ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Omigron Transformation Study 12 Laboratory Permission ஒமிக்ரான் உருமாற்றம் ஆய்வு 12 ஆய்வக அனுமதிமேலும் செய்திகள்
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்