வேதா இல்லம் எங்களுக்கு கோவில்!: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும்...வேதனையில் எடப்பாடி பழனிசாமி..!!
2021-11-29@ 15:56:01

சேலம்: முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்ற நோக்கிலேயே அதனை நினைவு இல்லமாக மாற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் நிச்சயம் மீட்டெடுக்கப்படும் அவர் உறுதியளித்திருக்கிறார். அன்வர் ராஜா குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, அதிமுக ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் கட்சி என்பதால் அனைவரது கருத்துக்களும் கேட்கப்படும் என்றும் தேவையில்லாத கருத்துக்கள் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களை நிறுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை