தொடரும் கனமழை!: காஞ்சிபுரம் வரதராஜபுரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
2021-11-29@ 11:48:31

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபுரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். தொடர்ந்து 3வது நாளாக நடைபெறக்கூடிய இந்த ஆய்வில், தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ள பாதிப்பு சேதங்களை நேரில் பார்வையிட்டார்.
வரதராஜபுரம், முடிச்சூர் பகுதி என்பது அடையாற்றின் கரையோரம் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளாகும். இங்கு அருகில் இருக்கக்கூடிய ஏரிகள் நிரம்பியதாலும், அடையாற்றில் இருந்து வரக்கூடிய உபரிநீரின் காரணமாகவும் கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முழுக்கால் வரைக்கும் தண்ணீர் இருக்கக்கூடிய பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். வெள்ள பாதிப்புகள் எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்து அவர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே வரதராஜபுரம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர், தற்போது முடிச்சூர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அரசி, பருப்பு, பெட்ஷீட், எண்ணெய், மளிகை பொருட்கள், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். முதல்வருடன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் வருவாய், பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
8வது மண்டல பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சிந்தாதிரிப்பேட்டை பாஜ பிரமுகர் கொலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி
மில்லிங் செய்யாமல் சாலை அமைத்த நிர்வாக பொறியாளர் மாற்றம்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!