பத்தனம்திட்டா அருகே மயக்க மருந்து கொடுத்து மார்க்சிஸ்ட் நிர்வாகி பலாத்காரம்: டிஒய்எப்ஐ நிர்வாகி உள்பட 12 பேர் மீது வழக்கு
2021-11-29@ 01:24:17

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் சஜி மோன்(44). திருவல்லா கோட்டாளி மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளராக உள்ளார். அதே கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இளம்பெண் ஒருவர், மாவட்ட எஸ்பியிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் கோட்டாளி கிளை செயலாளர் சஜிமோன், டிஒய்எப்ஐ நாசர் ஆகிய 2 பேரும் பத்தனம்திட்டாவில் ஒரு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை காரில் அழைத்து சென்றனர். அப்போது காரில் வைத்து நாசர் ஜூஸ் கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்தது எனக்கு தெரியாது.
அதை குடித்ததும் நான் காரில் மயங்கி விட்டேன். அப்போது 2 பேரும் சேர்ந்து என்னை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து என்னை பலாத்காரம் செய்தனர். இதையடுத்து 2 பேரும் ஆபாச காட்சிகளை சமூக வலைதளதில் பரப்பியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய திருவல்லா போலீசுக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஎம் கிளை செயலாளர் சஜி மோன், நாசர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் செய்திகள்
காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மாமியார்: குழவிக் கல்லை போட்டு கொன்ற மருமகன் கைது
கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு தலையில் கத்தி வெட்டு; நண்பர் கைது
புளியந்தோப்பில் கோயிலை உடைத்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது
வெளிநாடு கடத்த இருந்த ரூ.2 கோடி உலோக சிலைகள் மீட்பு-மயிலாடுதுறை அருகே ஒருவர் கைது
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற 45 வயதான மீனவ பெண் பலாத்காரம் செய்து, எரித்து கொலை : ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!
அரக்கோணம் அருகே சடலமாக மீட்பு காஞ்சிபுரம் தம்பதியை கொன்ற உறவினர் உட்பட 3 பேர் கைது: சூனியம் வைத்ததாக கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி