பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலி: வீடியோ வைரல்
2021-11-29@ 01:12:13

ஊட்டி: ஊட்டி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலியின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வன கோட்டத்தில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையானது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் படகு இல்லம் உள்ளது. இந்த அணை கரைகளில் அவ்வப்போது மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் அருந்தி செல்வதை காண முடியும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பைக்காரா அணையில் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அணையின் கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டு கொண்டிருந்தது. படகு அருகில் வருவதை பார்த்த உடன் நீரில் இருந்து கரைக்கு சென்ற புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுக்கு குட்பை: விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
சிஐடியு ஆர்ப்பாட்டம்
தந்தையை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் சுற்றிவளைத்து கைது
கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!