வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
2021-11-28@ 21:41:54

திருவனந்தபுரம்: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரள வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ‘ஒமிக்ரான் வைரஸ்’ பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவில்ைல. ஆனாலும் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, போர்ட்ஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரிசீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வருபவர்கள் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அங்கிருந்து வருபவர்களில் 5 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். கேரளாவுக்கு வந்த பிறகும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்த வேண்டும். தொடர்ந்து 7 நாள் தனிமை காலம் முடித்த பின்னரும் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
குர்ஆனை வீட்டில் மட்டும் சொல்லிக் கொடுங்கள் மதரஸா வார்த்தைக்கே முடிவு கட்ட வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு
பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு
தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து பக்தர்கள் வருகை ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திப்பு
கர்நாடகாவில் பரபரப்பு அணைக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர்
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரம் கைதான ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை