ஊட்டி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலி: வீடியோ வைரல்
2021-11-28@ 21:21:09

ஊட்டி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட பின் வனப்பகுதிக்கு சென்று மறைந்த புலியின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வன கோட்டத்தில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையானது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு குழாம் உள்ளது. இந்த அணை கரைகளில் அவ்வப்போது மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் அருந்தி செல்வதை காண முடியும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பைக்காரா அணையில் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அணையின் கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டு கொண்டிருந்தது. படகு அருகில் வருவதை பார்த்த உடன் நீரில் இருந்து கரைக்கு சென்ற புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
கிழக்கு திமோரில் இன்று நிலநடுக்கம் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி