வெள்ளம் குறைந்தது: பாபநாசம் ஆற்றில் குளிக்க அனுமதி
2021-11-28@ 21:17:27

வி.கே.புரம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக பாபநாசம் அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதேபோல் காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை குறைந்த காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் பக்தர்களும் பொதுமக்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் பக்தர்கள் செல்வதற்கு நேற்றும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் கோயிலுக்கு செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று காலை 7 மணியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு படிப்படியாக குறைக்கப்பட்டு 3400 கனஅடி நீர் மட்டும் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்