சிவகாசி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி; கனமழைக்கு மறுகால் பாயும் கண்மாய்கள்.!
2021-11-28@ 11:17:27

சிவகாசி: சிவகாசி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 5 கண்மாய்கள் நிறைந்து மறுகால் திறந்து விடப்பட்டது. சிவகாசி பகுதிகளில் கனமழை காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மழைநீர் வர துவங்கியது. கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஊரணிகள் நிரம்பியது. மேலும் சிவகாசி பகுதிகளில் உள்ள 46 கண்மாய்களுக்கும் நீர்வரத்து இருந்தது.
இதில் சித்துராஜபுரம் புதுக்கண்மாய், ஆனைக்குட்டம் கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய், திருத்தங்கல் செங்குளம் கண்மாய், உறிஞ்சி குளம் கண்மாய்கள் நிறைந்து மறுகால் போனது. மேலும் 15க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு 50 சதவிகித தண்ணீர் வந்துள்ளது. இக்கண்மாய்களை ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: மே 20ம் தேதியுடன் கெடு முடிந்ததாக அதிகாரிகள் தகவல்
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு
புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம்: தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சூறைக்காற்றுடன் கனமழை கடலூரில் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!