மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய அரசு குழு திருப்பதியில் ஆய்வு
2021-11-28@ 01:16:30

திருப்பதி: திருப்பதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒன்றிய குழு நேற்று ஆய்வு செய்தது. திருப்பதியில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலைகள் கால்வாய்கள் உடைந்து மழை நீர் பெருக்கெடுத்து வீடுகளில் புகுந்தது. சித்தூர், கடப்பா, அனந்தபூர், நெல்லூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்பட்டதையடுத்து திருப்பதியில் நேற்று குணால் சத்யார்த்தி, அபய் குமார், ஸ்ரீநிவாஸ், சர்வன் குமார் சிங் ஆகிய 4 பேர் கொண்ட ஒன்றிய ஆய்வுக்குழு வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்தது.
திருப்பதியில் உள்ள மின்வாரிய சாலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அங்கு அமைக்கப்பட்டிருந்த போட்டோ கேலரியில் நகரின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்களை கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்து எம்ஆர் பள்ளி பாலாஜி காலனி திருப்பதி மேம்பாலம் குரலகுண்டா ஆட்டோ நகர் கிருஷ்ணா நகர், பூலவாணி குண்டா உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவரங்களை அதிகாரிகள் அவர்களுக்கு எடுத்துரைத்தனர். பொது மக்களிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் ஹரிநாராயணன் எம்எல்ஏ கருணாகர், மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா, மேயர் சிரிஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:
Rain Flood Impact Union Government Committee Tirupati Study மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய அரசு குழு திருப்பதி ஆய்வுமேலும் செய்திகள்
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்