பெங்களூருவில் பரபரப்பு தெ.ஆப்ரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று?
2021-11-28@ 00:16:06

பெங்களூரு: தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் புதிதாக பரவியுள்ள ‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவுவதை தடுக்க அனைத்து மாநில அரசு களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, தென் ஆப்ரிக்கா உட்பட இந்த வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 14 மாநாடு களில் இருந்து இந்தியா வந்துள்ள வர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து கடந்த 26ம் தேதி வரையில் 95 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பெங்களூருவில் தங்கியிருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது, ‘ஓமிக்ரான்’ தொற்றாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் 2 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இவர்களை தாக்கி இருப்பது ஓமிக்ரான் வைரசா என அறிய, அடுத்தக்கட்ட பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:
Bangalore South Africa 2 people Omigran infection? பெங்களூரு தெ.ஆப்ரிக்கா 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று?மேலும் செய்திகள்
பஞ்சாப் மாநில மாஜி காங். தலைவர் பாஜ.வுக்கு தாவினார்
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்
34 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சித்துவுக்கு ஓராண்டு சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு
ஞானவாபி மசூதி வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது: வாரணாசி நீதிமன்றத்துக்கு கட்டுப்பாடு
செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!