குடியிருப்பு பகுதியில் புகுந்த 3 மலைப்பாம்புகளால் பீதி
2021-11-27@ 11:20:37

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே திருவுடையார்பட்டி, மருத்துவக்குடிபட்டி மற்றும் சேவினிப்பட்டி பகுதிகளில் வீட்டின் அருகே நேற்று புகுந்த 12 அடி நீளமுள்ள மூன்று மலைப்பாம்புகளை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
திருப்புத்தூர் ஒன்றியம் மகிபாலன்பட்டி ஊராட்சி மருத்துவக்குடிபட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம்(40). நேற்று இவரது வீட்டின் அருகே உள்ள கூரை வீட்டில் சுமார் 12 அடி நீளமுள்ள வெங்கனத்தி இனத்தைச்சேர்ந்த மலைப்பாம்பு கிடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாக்கியம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, தியணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதேபோன்று திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டி கிராமத்தில் உள்ள அழகுமீனா(38) என்பவரது வீட்டின் அருகில் கிடந்த சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
இதேபோன்று திருப்பத்தூர் அருகே விடையார்பட்டி சுப்பிரமணி என்பவரது வீட்டில் இருந்த 12 அடி மலைப்பாம்பையும் பிடித்தனர். பின்னர் இந்த மூன்று பாம்புகளையும் திருப்புத்தூர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மதகுபட்டி அருகே உள்ள மண் மலை பகுதியில் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக விட்டனர்.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!