நீலகிரி மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
2021-11-26@ 21:40:50

ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டராக 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். யானைகள் வழித்தட பிரச்னை தொடர்பான வழக்கில் கலெக்டரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நீலகிரி கலெக்டராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நிர்வாக காரணமாக இவரை பணிமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை, ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், கலெக்டரை இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நகராட்சிகளின் இயக்குநராக பதவி வகித்து வந்த அம்ரித்தை தமிழகஅரசு நியமித்து உத்தரவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட அம்ரித், இன்று நீலகிரி மாவட்ட கலெக்டராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, அனைத்து துறைகளின் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!