சென்னை மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2021-11-26@ 00:37:32

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்சென்னை பகுதியில் போட்டியிடும் திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்குகின்றனர். மாவட்ட செயலாளரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை 5 எம்எல்ஏகள் தொகுதிகளில் 56 வார்டுகள் உள்ளன. இதில் பொது, பெண்கள், எஸ்.சி உள்ளிட்ட வார்டுகள் என தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக அரசு 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தியது.
2021ல் திமுக தலைமையிலான அரசு அமைந்ததும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, திமுக வரலாற்று வெற்றியை பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தினார். நேற்று முன்தினம் முதல் திமுகவில் விருப்ப மனு பெறப்படுகிறது. 5 எம்எல்ஏகள் தொகுதிகளில் உள்ள 56 வார்டுகளுக்கு விருப்ப மனு பெறப்படுகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுவை வாங்கியுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மாற்றம் செய்தால் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆகையால் காலதாமதம் செய்வதை தவிர்த்து 2019ல் அதிமுக வரையறையின் படி சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும்.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்
கும்பமேளாவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு: இயக்குனர் பேட்டி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்