வீடு கட்ட சிறுக, சிறுக சேமித்த ரூ.5 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த பனியன் தொழிலாளி தற்கொலை!: இரு பெண் குழந்தைகள் உடன் தவிக்கும் மனைவி..!!
2021-11-25@ 17:36:02

திருப்பூர்: திருப்பூரில் வீடு கட்ட சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். திருப்பூர் பழையகாடு ராஜமாதா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு 6 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வீடு கட்டுவதற்காக இருவரும் சேர்த்து சிறுக. சிறுக 5 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தனர். இந்த பணத்தை வைத்து சுரேஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். மனைவி அடிக்கடி கண்டித்து வந்த நிலையில், சுரேஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த சேமிப்பு பணம் 5 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ், நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், தூக்கி தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில குழுக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!
75 ஆண்டுகளுக்கு பின் கோடையில் மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : விவசாயிகள் மகிழ்ச்சி!!
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு
கும்மிடிப்பூண்டியில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
கவர்ச்சி திட்டங்கள் எதிரொலி!: தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 6 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை..!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளை!: மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை