உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிப்பதை எதிர்த்து மதுரை கப்பலூர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம்
2021-11-25@ 16:51:35

மதுரை: உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிப்பதை எதிர்த்து மதுரையை அடுத்துள்ள கப்பலூர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து சுமார் 3 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் விதிமுறைகள் மீறி அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர் அனைத்து வாகனங்களும் சுங்கம் செலுத்த கோரியதால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம், ராஜபாளையம், செங்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுங்க நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அடுத்த அறிவிப்பை வெளியிடும் வரை திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
கவர்ச்சி திட்டங்கள் எதிரொலி!: தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 6 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை..!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளை!: மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை