முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள் சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை :முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
2021-11-25@ 10:46:59

மும்பை : முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள் சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்து ரிசர்வ் வங்கியின் மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோ கரன்சிகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஓரிரு கிரிப்டோ கரன்சிகள் மட்டுமே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்கும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார ஆலோசகருமான ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
6000த்திற்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் சந்தையில் இருந்தாலும் பெரும்பாலானவற்றுக்கு மதிப்பே இல்லை என்றும் கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கும் பலர் பாதிக்கப்பட கூடும் என்றும் எச்சரித்துள்ளார். முறைப்படுத்தப்படாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சிட் பண்டுகள் எந்த அளவிற்கு ஆபத்தோ, அதே போல தான் முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்தானவை என்று கூறும் அவர், சீட்டு கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தை திருடிக் கொண்டு மாயமாகிறார்களோ அதே போல தான் கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்து நிறைந்தவை என்று எச்சரித்துள்ளார்.
Tags:
சீட்டு கம்பெனிமேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி கோர விபத்து: படுகாயமடைந்த 50 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை
இந்தியாவில் ஒரே நாளில் 9,062 பேருக்கு கொரோனா... 36 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!