அடுத்த 3 ஐபிஎல் சீசன்களுக்கு மகேந்திர சிங் தோனியை தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு!!
2021-11-25@ 09:46:06

சென்னை : அடுத்த 3 ஐபிஎல் சீசன்களுக்கு மகேந்திர சிங் தோனியை தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. தோனி மட்டுமல்லாது ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கிறது. ஒரு அணி குறைந்தபட்சம் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மொயீன் அலியை தக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு வேளை மொயீன் அலி சம்மதிக்காத பட்சத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் கரண் நான்காவது வீரராக தக்கவைக்கப்படலாம்.
முதல்முறையாக சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்படவில்லை என்று தெரியகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரிஷப் பன்ட், அக்ஷர் படேல், பிரித்வி ஷா மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்க்கியாவை தக்க வைத்து கொண்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மும்பை வீரர் சூர்ய குமாரிடமும் லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொல்கத்தா அணியின் சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணி ரோஹித் ஷர்மா, பும்ரா, பொல்லார்டு, இஷன் கிஷான் ஆகியோரை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. நவம்பர் 30ம் தேதிக்குள் தக்க வைத்த வீரர்களின் விவரத்தை அணிகள் அறிவிக்க வேண்டும் என்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அடுத்த அறிவிப்புகள் வெளியாகலாம்.
மேலும் செய்திகள்
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!