சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை படகுத்துறை வெறிச்சோடியது
2021-11-24@ 14:13:53

ஜோலார்பேட்டை : தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை படகுத்துறை வெறிச்சோடி காணப்படுகிறது.ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் எப்போதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலவுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்தும், வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் இடிந்தும் விழுந்தன. மேலும், ஏலகிரி மலை செல்லும் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்ல போலீசார் தடைவிதித்தனர்.
இதனாலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையின்றி, கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி இருக்கிறது. மேலும், அங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து சேறும், சகதியுமாக இருந்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பூங்காக்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். சுற்றுலா பயணிகள் தடையின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை