ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சியில் கெட்டுப்போன அரிசி, பருப்பு விநியோகம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
2021-11-24@ 12:29:31

ஒடுகத்தூர் : ஒடுகத்தூரில் கெட்டுபோன அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நியாயவிலைக் கடை உள்ளது. சுமார் 25 ஆண்டு பழமையான இந்த கட்டிடத்தில் ஓட்டை உடைசல் காணப்படுகிறது. தற்போது பெய்த மழையால் மழைநீர் முழுவதும் கட்டிடத்திற்குள் சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட நனைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரமுகர் பதவி வகிப்பதால் நியாய விலைக் கடை விற்பனையாளர் மக்களுக்கு கெட்டுபோன அரிசியையே விநியோகம் செய்வதாகவும் கேட்டால் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாகவும் கூறப்படுகிறது.இதனால், அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் கடையில் ஆய்வு நடத்தினர்.
அகரம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பிரமுகர் பதவி வகித்து வருகின்றார். இவர், கூட்டுறவு அலுவலகத்தில் கட்சி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கட்சி அலுவலகம்போல் மாற்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்