நாகை மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை ஒன்றிய குழுவினர் நேரில் ஆய்வு
2021-11-23@ 18:43:41

நாகை: நாகை மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். நாகை மாவட்டத்தில் பாப்பாக்கோவில் அருகே ஒன்றிய குழுவினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் நாகை மாவட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் கலங்கிய நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டனர். இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஒன்றிய குழுவிடம் எடுத்து வைத்து வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கிட வேண்டும், பயிர்க்காப்பீடு திட்டத்தில் பாதிப்பிற்கேற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதியில் தொடர்வதால் பயிர்காப்பீடு செலுத்துவதற்கான காலக்கெடுவை முன்னர் இருந்தது போல் டிசம்பர் மாதம் இறுதி வரை செலுத்த அவகாசம் வேண்டும் எனவும் ஒன்றிய குழுவினரை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!