இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது..!!
2021-11-23@ 16:10:57

இஸ்ரேல்: இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா கொல்லுயிரியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் நாடு இஸ்ரேல். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியதால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என அறிவித்த நாடும் இஸ்ரேல் ஆகும். ஆனால் அங்கு கோடை காலத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கூட கொரோனாவால் தாக்கப்பட்டனர். அதிலும் அண்மை காலமாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம். இந்நிலையில், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்தியாவிலும், குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 2022 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!
திவாலுக்கு வரிசை கட்டி நிற்கும் நாடுகள்: இலங்கை... ஓர் ஆரம்பம்! முழுமையாக ஸ்தம்பிக்கும் உலக பொருளாதாரம்
2 வாரங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசரநிலை வாபஸ்: மாணவர்கள் பேரணியில் தடியடியால் பரபரப்பு
ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி: பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்