புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் கடலோர காவல்படை வீரர் கைது
2021-11-23@ 00:11:00

புதுச்சேரி: புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய கடலோர காவல்படை வீரர் உட்பட மேலும் 2 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு அண்ணா நகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். அவரிடம் 40க்கும் மேற்பட்டோர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளரான சுனிதாவை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
அங்கு வாடிக்கையாளர்களாக வந்து சென்ற 40 பேரின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் சுனிதா உள்ளிட்ட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் 35 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகன் (30), செய்யாறு சீனுவாசன் (50) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் ஜெகத்ரட்சகன் இந்திய கடலோர காவல்படையில் வீரர் என்பதும், சீனுவாசன் பைனான்ஸ் தொழில் செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
புல்லட் வாங்க மனைவியின் 17 சவரனை திருடிய புதுமாப்பிள்ளை: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கோயில் உண்டியல் உடைப்பு
ஆட்டோவில் வந்து கைவரிசை; மாஸ்க் அணிந்து திருட்டு அண்ணன், தம்பி கைது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்