காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: செல்வம் எம்பி கோரிக்கை
2021-11-23@ 00:09:35

காஞ்சிபுரம்: ரயில்வே தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சென்னை தென்னக ரயில்வே தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு துரித இருப்புப்பாதை போக்குவரத்து (MRTS) திட்டத்தை வலியுறுத்தினார். மேலும், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் மகளிருக்கு சிறப்பு ரயில், கூடுதல் ரயில் பெட்டிகள் வேண்டும். ரயில் நிலையங்களில் மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்தங்கள் அமைக்க வேண்டும்.
ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணிகளுக்கு சுகாதாரமான ஓய்வறை வேண்டும். கால்நடை விபத்துக்களை தடுக்க சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும். ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும். மதுராந்தகம், காட்டாங்கொளத்தூரில் விரைவு ரயில் நிறுத்த வேண்டும். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேல்மருவத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகளுக்காக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருத்தணி வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், அரக்கோணம் வழியாக மாமல்லபுரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கிண்டிக்கு சுங்குவார்சத்திரம், ஓரகடம், பெரும்புதூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பேசினார்.
மேலும் செய்திகள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!