கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூரில் ரூ.2 கோடியில் 3 ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி
2021-11-23@ 00:07:32

சென்னை: கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் 3 ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி கட்டிடம் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நல துறை சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தபடி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினத்தில் புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும்.
இந்த கல்லூரிகளில் தலா 50 மாணவிகள் தங்கி பயில ஏதுவாக மூன்று ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கான தொடரும் செலவினமாக ரூ.91,36,104 மற்றும் தொடரா செலவினமாக ரூ.14,98,500 ஆக மொத்தம் ரூ.1,06,34,604 செலவில் தொடங்கிய நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பன் கல்லூரி வளாகத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சடையம்பட்டியிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலும் கல்லூரி விடுதி தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Kallakurichi Nagapattinam Cuddalore Rs 2 crore 3 Adithravidar College estudiante albergue கள்ளக்குறிச்சி நாகப்பட்டினம் கடலூரில் ரூ.2 கோடி 3 ஆதிதிராவிடர் கல்லூரி மாணவி விடுதிமேலும் செய்திகள்
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்: ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
சென்னை பிரபல மாலில் நடந்த மது விருந்தில் அதிர்ச்சி சம்பவம் அதிக போதையில் மயங்கி விழுந்து பலியான ஐ.டி. ஊழியர்: போதைப்பொருள் குறித்து போலீஸ் விசாரணை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்