கன மழை காரணமாக மது விற்பனை 40% சரிவு
2021-11-23@ 00:07:29

சென்னை: தமிழகத்தில் கன மழை காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை 40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, பீர் வகைகளின் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 4,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக ரூ.90 முதல் ரூ.110 கோடி வரையில் நாள்தோறும் விற்பனை நடைபெறும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி மற்றும் வார விடுமுறை நாட்களில் இந்த விற்பனை இரண்டு மடங்காக உயரும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளை சரிவர திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மதுவிற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை 40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘மழை காலம் என்றாலே மதுவிற்பனை சரிவை சந்திக்கும்.ஆனால், இந்தமுறை வழக்கத்தை விட விற்பனை குறைந்துள்ளது. நாள் தோறும் ரூ.5 லட்சம் வரையில் விற்பனை நடைபெறும் கடைகளில் தற்போது ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் மட்டுமே மதுவிற்பனையாகிறது. மழை காலம் என்பதால் பீர் வகைகள் 60 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல், கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் மேலும் விற்பனை சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.
மேலும் செய்திகள்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
8வது மண்டல பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சிந்தாதிரிப்பேட்டை பாஜ பிரமுகர் கொலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி
மில்லிங் செய்யாமல் சாலை அமைத்த நிர்வாக பொறியாளர் மாற்றம்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!