மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம்: கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
2021-11-21@ 16:42:26

கோவை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறைத்தலைவராக உள்ள பேராசிரியர் ரகுநாதன் இரவு நேரங்களில் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்புவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற பாலியல் தொல்லை அளித்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அக்கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பேராசிரியர் ரகுநாதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.
இந்நிலையில் யுஜிசி வழிகாட்டுதலின் படி பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்தும் குழுவினர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் ரகுநாதன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்ததையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்