கோத்தகிரி-கொடநாடு சாலையில் அபாயகரமான மரங்களை அகற்ற கோரிக்கை
2021-11-21@ 13:00:08

கோத்தகிரி: கோத்தகிரி-கொடநாடு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கேர்பெட்டா, புதூர், வார்விக் எஸ்டேட், கைகாட்டி, ஈளாடா ஆகிய கிராமங்கள் உள்ளன. சமீப காலமாக வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் சிறுசிறு நிலச்சரிவும், ஒரு சில இடங்களில் அபாயகரமான மரங்களின் கிளைகளும் சாலையில் விழுகின்றன.
கோத்தகிரி-கொடநாடு செல்லும் பிரதான சாலையில் அபாயகரமான மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் இயக்கி வருகின்றன. எனவே சாலையில் இருக்கும் அபாயகரமான மரங்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்