பெரியகுளம் அருகே ஹோமியோபதி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியவர் மீது போலீசார் வழக்கு பதிவு
2021-11-20@ 17:51:16

தேனி: பெரியகுளம் அருகே ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவரின் மனைவி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹோமியோபதி கிளீனிக் நடத்தி வந்தவர் 50 வயதான சீனிவாசன்.
இவர் முறையாக பதிவுபெற்ற ஹோமியோபதி மருத்துவம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் அந்த பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென தூசாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தற்கொலைக்கு தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் லட்சுமணன் தான் காரணம் என பெரியகுளம் போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
மாதந்தோறும் ரூ.50,000 பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஹோமியோபதி மருத்துவர் தற்கொலைக்கு தூண்டியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
சாலை விபத்தில் பிரபல ரவுடி பலி
காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் அருகே குருபகவான் கோயில் கும்பாபிஷேகம்
ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் திடீர் தீ; ஊழியர்கள் தப்பினர்
ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்