சிவலோகம் பகுதி மக்கள் வேதனை கிணறு இருக்கு..தண்ணீர் எடுக்க முடியலை
2021-11-20@ 12:32:56

அருமனை : அருமனையை அடுத்த களியல் அருகே சிவலோகம் உள்ளது. இங்கு சிற்றாறு-2 அணையின் முகப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அரசு பள்ளி ஆகியவற்றின் குடிநீர் தேவைக்காக, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அனுமதியுடன் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே பொதுப்பணித்துறையினரின் நடவடிக்கையால் அணைப்பகுதி முழுவதும் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன.
குடிநீர் கிணறு பொதுப்பணித்துறை பகுதியில் அமைந்துள்ளதால் மதில் சுவருக்குள் சிக்கி கொண்டது. இதனால் பொது மக்கள் கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்கும் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் உணவு சமைத்தல் உள்பட தேவைகளுக்காக வேறு பகுதிகளில் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
காலகாலமாக அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அணையில் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை