அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மீண்டும், மீண்டும் மண்சரிவு
2021-11-20@ 11:56:02

* சீரமைப்புப்பணிகளில் பின்னடைவு
கொடைக்கானல் :கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக, கடந்த பல நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த சாலை மூடப்பட்டது. சாலையை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் சாலையின் நடுவே உருண்டு விழுந்தது. இந்த பாறைகளை வெடி வைத்து அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக, இரவு கொடைக்கானல் அடுக்கம் - பெரியகுளம் சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சீரமைப்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறையினருக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் நேற்று காலை லேசான வெயில் அடித்தது. மதியத்திற்கு பின் மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக நேற்றுமாலை கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் டைகர் சோலை அருகே மரம் முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா... 360 முதலீடு செஞ்சா 5 கோடி கிடைக்குமாம்: இணையத்தில் வைரலாகும் நூதன மோசடி
‘‘தென்தமிழகத்தின் எல்லோரா'' கழுகுமலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?
தமிழக- கர்நாடக எல்லையில் காரை வழிமறித்து துரத்திய காட்டு யானை: அச்சத்தில் பயணிகள் கூச்சல்
போச்சம்பள்ளியில் ஏரிக்கரையில் கொட்டப்பட்டிருந்த 5 டன் மருத்துவ கழிவுகள் அகற்றம்
ராயக்கோட்டையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: 25 கிலோ பெட்டி 350க்கு விற்பனை
குத்தாலம் அருகே கங்காதரபுரத்தில் பாலம் கட்டப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!